Friday, May 21, 2010

ஈழம்

எலும்பாலான தூரிகை நுனியில்
எமது நரம்பே குஞ்சமென

எமது குருதித் தொட்டுத் தீட்டுகிறோம்
ஆயுதங்கள் கிழித்தெறிந்த
எம் கருப்புத்தோல் திரையாக

ஓவியத்திலிருந்தும்
உயிர் பெற்று எழுவோமென !!!!!!

Friday, May 7, 2010

கவிதை மேல் காதல்



என்றும் இல்லை மரணம்
எப்படி பிறந்தேன் என்று நினைவில்லை
நினைவுகளிலும் கனவுகள்
காற்றென உரசி செல்கின்றன
நாம் வாழும் கூடுகளை
கவிதைகளால் நெய்வோம் வா